பெரியார் தி.க. தலைவர் திருவாரூர் தங்கராசு வீடு மீது பாறாங்கல் வீசி தாக்குதல்
சென்னை: பல்வேறு தடைகளை மீறி தந்தை பெரியார் குறித்த நூல் தொகுப்பை உருவாக்கி சமீபத்தில் வெளியிட்ட பெரியார் திராவிடர் கழக மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசுவின் வீடு தாக்கப்பட்டது. பெரிய பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டு தாக்குதல் நடத்தியுள்ளது ஒரு கும்பல்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தங்கராசுவின் வீடு உள்ளது. இவரது மகன் புகழேந்தி. இவர் செய்தி- மக்கள் தொடர்புத் துறையின் துணை இயக்குநர் ஆவார்.
வீட்டிற்கு வந்த அவர் காரை நிறுத்தி விட்டு உள்ளே போனதும் ஒருகும்பல் பாறாங்கல்லைப் போட்டுத் தாக்குதல் நடத்தியது.
இதுகுறித்து தங்கராசு கூறுகையில், இரண்டு தினங்களுக்கு முன்பு பெரியார் நூல் தொகுதிகள் வெளியானது. அந்த தொகுதிகள் வெளியாக தடை விதித்திருந்தவர்கள்தான் இந்த செயலை செய்திருக்கிறார்கள்.
நான் நூலை வெளியிட்டவன் என்பதால் இந்த செயலை செய்திருக்கிறார்கள் என்றார். இந்த சம்பவம் குறித்து தங்கராசுவின் வழக்கறிஞரான துரைசாமி கூறுகையில், இது தங்கராசுவையும், அவரது குடும்பத்தினரையும் கொல்ல நடந்த சதியாகும் என்றார்.
பெரியாரின் குடிஅரசு தொகுதிகளை சமீபத்தில் திருவாரூர் தங்கராசு வெளியிட்டார். பெரியார் திராவிடர் கழகம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
ஆனால் இதை எதிர்த்து கி.வீரமணி தலைமயிலான திராவிடர் கழகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் அதை விசாரித்த உயர்நீதிமன்றம், வீரமணியின் கோரிக்கையை டிஸ்மிஸ் செய்து விட்டது.
இதைத் தொடர்ந்து குடிஅரசுத் தொகுதி நூல்களை பெரியார் திராவிடர் கழகம் பிரஸ் கிளப்பில் வைத்து வெளியிட்டது. கொளத்தூர் மணி தலைமையில் நடந்த விழாவில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு கலந்து கொண்டு முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில்தான் தங்கராசு வீடு மீது பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications