பேட்மிண்டன் சங்கத் தலைவர் தேர்தலில் அசார் திடீர் விலகல்
டெல்லி: இந்திய பூப்பந்தாட்ட அசோஷியேஷன் (பேட்மிண்டன் சங்கம்) தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் திடீரென விலகிக் கொள்ளவே, தற்போதைய தலைவர் வி.கே. வர்மாவே மீண்டும் தலைவராகியுள்ளார்.
கடந்த 12 ஆண்டுகளாக உள்ள வர்மா தலைவராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் வீரராக இருந்து அரசியலிவாதியாகிய அசாருதீன் மொராதாபாத் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஆவார். விளையாட்டு அமைச்சகத்தின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார் அசாருதீன்.
அதற்கு முன்பு, தனக்கு சாதகமான நிலையை உருவாக்கிக் கொள்வதற்காக, பேட்மிண்டன் சங்கத்தேர்தலுக்கு தடை கோரி ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி மாவட்ட கோர்ட்டை அணுகினார்.
ஆனால் கோர்ட் தேர்தலை தடை செய்ய மறுத்து விட்டது. இதையடுத்து தலைவர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட்டில், சூதாட்டப் புகாரில் ஈடுபட்டு வாழ்நாள் முழுவதும் விளையாடத் தடை விதிக்கப்பட்ட ஒருவர் எப்படி போட்டியிடலாம் என வி.கே.வர்மா பிரச்சினை கிளப்பினார்.
இதையடுத்தே பின்வாங்கிய அசாருதீன் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக இந்தத் தேர்தலுக்கான பார்வையாளராக தீபிகா கச்சல் என்பவரை மத்திய விளையாட்டு அமைச்சகம் நியமித்திருந்தது.
அடுத்து உறுப்பினர்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications