ஜூலை 5 முதல் பொறியியல் பொது கவுன்சிலிங் தொடக்கம்
சென்னை: ஜூலை 5ம் தேதி முதல் பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு தொடங்குவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 454 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 25 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர்களை சேர்க்கவே இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது.
கவுன்சிலிங்கில் கலந்துகொள்வதற்காக ஒரு லட்சத்து 65 ஆயிரம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர்.
கவுன்சிலிங் தொடங்குவது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறுகையில்,
மாணவர்கள் கவுன்சிலிங்கின்போது கல்லூரியை, பிரிவை தேர்ந்து எடுக்கும் போது இருமாணவர் ஒரே கட் ஆப் எடுத்திருந்தால் முதலில் யாருக்கு வாய்ப்பு அளிப்பது என்பதை முடிவு செய்ய ஒவ்வொரு மாணவருக்கும் கம்ப்யூட்டர் மூலம் ஒரு நம்பர் கொடுக்கப்படும். இது ரேண்டம் நம்பர் ஆகும். இந்த ரேண்டம் நம்பர் வருகிற 15-ந் தேதி கொடுக்கப்பட உள்ளது. விண்ணப்பித்த மாணவர்களின் கட் ஆப் மார்க் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ரேங்க் பட்டியல் 20-ந் தேதிக்குள் வெளியிடப்பட இருந்தது. ஆனால் 18-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.
21 மற்றும் 22-ந் தேதிகளில் விளையாட்டு இட ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்படும். விளையாட்டு மாணவர்களுக்கான கவுன்சிலிங் 28-ந் தேதி தொடங்குகிறது. பிளஸ்-2 படிப்பில் தொழில்கல்வி எடுத்து படித்த மாணவர்களுக்கு 29, 30 மற்றும் ஜுலை 1, 2, 3 ஆகிய தேதிகளில் 5 நாட்கள் நடைபெற உள்ளது.
ஜுலை 5-ந் தேதி பொது கவுன்சிலிங் தொடங்குகிறது. இந்த கவுன்சிலிங் ஒரு மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்?












Click it and Unblock the Notifications