ஆந்திரா: ஊழல் அமைச்சர்களுக்கு குறி வைக்கும் நக்ஸல்கள்!

இந்த 'களையெடுப்பை' அவர்கள் போலீஸ் வேடத்தில் போய் செய்யத் திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளதால் அமைச்சர்கள் மத்தியில் பெரும் பீதி நிலவுகிறது.
சமீபத்தில் ஆந்திர மாநிலம் மெகபூப் நகரில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் சுற்றி வந்த நக்சலைட் சந்திரசேகர் பிடிபட்டார். அவரிடமிருந்து ஏ.கே.47 துப்பாக்கி, செல்போன்கள், அமைச்சர்களின் பாதுகாவலர்கள் அணியும் சபாரி உடைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவருடன் போலீஸ் வேடத்தில் இருந்த 2 முக்கிய நக்சலைட்டுகள் தப்பிவிட்டனர்.
பிடிபட்ட நக்சலைட் சந்திரசேகரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, ஊழல் அமைச்சர்கள்- அதிகாரிகளைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளோம். இதற்காக ஒரு தனிப் பிரிவைறை ஏற்படுத்தியுள்ளோம். அவர்கள் ஹைதராபாத்தில் பதுங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசாருக்கு உளவுப் பிரிவினர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நக்சலைட்டுகள் போலீஸ், அமைச்சர்களின் பாதுகாவலர்கள் வேடத்தில் வருவதால் ஆந்திர போலீசார் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும். ஊழல் புகார் கூறப்பட்ட அமைச்சர்களுக்கு பாதுகாப்பு தரும் போலீசார் எந்நேரமும் விழிப்புடன் செயல்பட வேண்டும். அடையாள அட்டை வைத்திருப்பது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications