உடல்நிலை மோசம்.. யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பார்வதி அம்மாள்!

சில வாரங்களாக வல்வெட்டித்துறை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் புதன்கிழமை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று இலங்கை தமிழ் இணைய தளங்கள் தெரிவித்துள்ளன.
அவரது உடல்நிலை மோசமானதையடுத்து, மேல் சிகிச்சைகளுக்காக அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனைத் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
மலேசியாவிலிருந்து சென்னைக்கு சிகிச்சைக்காக உரிய விசா பெற்று வந்த பார்வதி அம்மாளை விமான நிலையத்தில் இறங்கக் கூட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர் இந்திய அதிகாரிகள்.
தமிழ் உணர்வாளர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் சிகிச்சை பெற வேண்டுமானால், பார்வதி அம்மாள் மருத்துவமனையில் மட்டுமே தங்கியிருக்க வேண்டும், அரசியல் பிரமுகர்களைப் பார்க்கக் கூடாது என்று மத்திய - தமிழக அரசுகள் நிபந்தனை விதித்திருந்தன. இதன் பின்னர் மலேசியாவில் இருந்து பார்வதி அம்மாள் சென்னைக்கு வராமல் இலங்கை சென்று விட்டார்.
அவர் தனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற விரும்புகிறார் என்பது தெரிய வந்தது. எனவே நிபந்தனைகளை தளர்த்தலாமா என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது. அதற்கு பார்வதி அம்மாள் தமது மகள் வீட்டில் தங்கியிருக்க ஆட்சேபனை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்தது.
இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதர் மற்றும் தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள புதிய கடிதம் ஒன்றில், பார்வதி அம்மாள் தமது மகள் வீட்டில் தங்கலாம். நண்பர்கள், உறவினர்கள் சந்திக்கலாம். ஆனால் அரசியல் கட்சியினர், தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் சந்திக்க கூடாது என்று மத்திய அரசு தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் பார்வதி அம்மாள் நிலை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கூறியிருந்தது.
சிகிச்சை பெறுவதற்கான நிபந்தனையை மத்திய அரசு தளர்த்தினாலும், அதைப் பரிசீலிக்கும் மன நிலையில் பார்வதி அம்மாள் இல்லை என்று அவரது உறவினரும், முன்னாள் எம்.பியுமான சிவாஜிலிங்கம் கூறியிருந்தார்.
மேலும் பார்வதி அம்மாள் முழுமையாக குணமாகவில்லை. ஆனால் நபர்களை அவர் அடையாளம் கண்டு கொள்கிறார். அவருடைய கனடா மகள் தொடர்ந்து தொலைபேசி மூலம் தனது தாயாரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்து வருகிறார் என்றார்.
இந்நிலையில் பார்வதி அம்மாளின் உடல்நிலை மோசமானதையடுத்து, மேல் சிகிச்சைகளுக்காக அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனை வல்வெட்டித் துறை மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications