தமிழகத்தில் முக்கிய உயர் போலீஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் சிலர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மண்டல ஐ.ஜி. யாக இருந்து வந்த துரைராஜ், தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஐ.ஜி. யாக மாற்றப்பட்டுள்ளார்.
அதிரடிப்படை தலைவராக உள்ள ஆபாஷ்குமார், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை மத்திய மண்டல இணை ஆணையராக உள்ள ரவிக்குமார், ஆயுதப்படை டி.ஐ.ஜி. யாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அப்பதவியில் இருந்து வரும் ஜெயராமன், வேலூர் சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
வேலூர் டி.ஐ.ஜி. தாமரைக்கண்ணன் சென்னை மத்திய மண்டல இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications