For Daily Alerts
Just In
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் ஊழியர்களுக்கு 'வாக்கி டாக்கி'!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் கோவிலில் பொது தரிசனம், சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம், சிறப்பு அமர்வு தரிசனம் என நான்கு முறைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
அதிலும் விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிகின்றனர். இது போன்ற நேரங்களில் வரிசை முறையை முறைப்படுத்தவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கோவிலில் உள்ள அதிகாரிகள், பணியாளர்கள், செக்யூரிட்டிகள் ஆகியோருக்கு முதல் கட்டமாக 10 வாக்கி டாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.
Comments
திருச்செந்தூர் வாக்கி டாக்கி பக்தர்கள் பாதுகாப்பு tiruchendur subramanya swamy temple devotees security
Story first published: Monday, June 21, 2010, 10:28 [IST]