பெட்ரோல் வரி: மாநில அரசுகள் குறைக்க வேண்டும்-தியோரா

இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்:
"பெட்ரோல்-டீசல் மீது மாநில அரசுகள் பல்வேறு வரிகளை விதிக்கின்றன. சில மாநிலங்களில் பெட்ரோல் மீது 3 சதவீத வாட் வரியும், டீசல் மீது 24.7 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது. இதனால் விலை உயருகிறது. எனவே, விற்பனை வரி மற்றும் வாட் போன்ற வரிகளைக் குறைத்தால், பெட்ரோல் விலை குறைய வாய்ப்புள்ளது.
சில மாநிலங்களில் ரேஷனில் வழங்கப்படும் மண்எண்ணைக்கும் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியால், ஏழைகள் கூடுதலான தொகை கொடுத்து மண்எண்ணை வாங்க வேண்டி இருக்கிறது. எனவே மண்எண்ணை மீது மாநில அரசுகள் விதிக்கும் வரியை குறைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும்.
சர்வதேச கச்சா விலை உயர்வு காரணமாக, பெட்ரோலியம் பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. என்றாலும், விலை உயர்வு இந்திய மக்களை பாதிக்க கூடாது என்பதற்காக, எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் மானியம் அளித்து வருகிறது.
நடப்பு ஆண்டில் எண்ணை நிறுவனங்களுக்கு ரூ.26 ஆயிரம் கோடி மானியம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ரேஷன் மண்எண்ணையை குறைந்த விலையில் எண்ணை நிறுவனங்கள் வழங்குவதற்கு ரூ.14 ஆயிரத்து 430 கோடி மானியம் வழங்கப்பட்டு உள்ளது.
பெட்ரோல்-டீசல் மீது மத்திய அரசு ஒருங்கிணைந்த விற்பனை வரி விதிக்கிறது. இதனால் வரி குறைகிறது. இதுபோன்ற முறையை மாநில அரசுகள் விரைவாகப் பின்பற்ற வேண்டும்.
இதன் மூலம் ஏழை மக்களுக்கு பெட்ரோல், டீசல், மண்எண்ணை குறைவான விலையில் கிடைக்கும். மத்திய பெட்ரோல் விலையை உயர்த்தும் போதெல்லாம், மாநில அரசுகளும் வரியை உயர்த்தும் போக்கையும் கைவிட வேண்டும்."
இவ்வாறு முரளி தியோரா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
இதற்கிடையே பெட்ரால், டீசல் விலையை உயர்த்துவது குறித்து அடுத்த வாரம் திங்கள்கிழமை மத்திய அரசு அறிவிக்கவுள்ளதாகத் தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications