ஈழப் போரின்போது நடந்த தமிழினப் படுகொலைகள்-போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. உத்தரவு

போர்க் குற்ற விசாரணைக்கான குழுவை அமைத்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் குழுவில் மொத்தம் மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் - முன்னாள் இந்தோனேசிய அரசு வழக்கறிஞர் மர்சுகி தருஸ்மேன், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் சூகா, அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ரட்னர் ஆகியோர்.
கடந்த வாரம் ஐ.நா. அரசியல் விவகாரப் பிரிவு இணைச் செயலாளர் லின் பாஸ்கோ இலங்கைக்குச் சென்றார். அப்போது அதிபர் ராஜபக்சேவை சந்தித்தார். பின்னர் போர்நடந்த பகுதிகளையும் பார்வையிட்டு விட்டுத் திரும்பினர். இந்தநிலையில் போர்க்குற்ற விசாரணைக் குழுவை ஐ.நா. அமைத்துள்ளது.
ஈழத்தில் போர் உச்சத்தில்இருந்த காலகட்டத்தில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தது இலங்கை. இதுகுறித்து அப்போதே உலக நாடுகளில் மனித உரிமை ஆர்வலர்கள் ஐ.நா. தலையிட வேண்டும் என வலியுறுத்தி குரல் கொடுத்தனர். ஆனால் அதை ஐ.நா. பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை.
போர் முடிந்த பிறகும் கூட ஐ.நா. ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை. போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா.மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை பலமுறை கோரிக்கை விடுத்தும் கூட அதை யாரும் கண்டுகொள்ளாமலேயே இருந்தனர்.
மேலும், ஈழத்தில் ஒரு லட்சம் தமிழர்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தபோதிலும் அதை ஐ.நா. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் சமீபகாலமாக ஈழப் போரின் போது நடந்த ராணுவ அத்துமீறல்கள், படுகொலைகள் தொடர்பான வீடியோ படங்கள், புகைப்படங்கள் வெளியாக ஆரம்பித்த நிலையில் இலங்கை மீதான ஐ.நா.வின் நிலைக்கு ஆட்சேனையும், எதிர்ப்பும் வலுத்து வந்தது.
இந்த நிலையில்தான் போர்க்குற்ற விசாரணைக்கு ஐ.நா. உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விசாரணைக் குழு குறித்து இலங்கை சென்றிருந்த பாஸ்கோ கூறுகையில், ஈழப் போரின்போது நடந்த அத்துமீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து தீவிரமாக விசாரிக்கப்படும். இறுதிக்கட்டத்தின்போது நடந்த ராணுவ அத்துமீறல்கள் குறித்து முக்கியமாக விசாரிக்கப்படும் என்றார்.
ஐ.நா. கணக்குப்படி கடைசி கட்டத்தில் 7500 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் இது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டதாக இருக்கும் என பல்வேறு மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இலங்கை அதிர்ச்சி - கோபம்
ஐ.நா.வின் விசாரணைக் குழுவுக்கு இலங்கை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு மீடியா அமைச்சர் கெகலிய ரம்புகவெல்லா கூறுகையில், இது தேவையில்லாதது, ஏற்றுக் கொள்ளமுடியாதது. இலங்கை போன்ற சுதந்திரமான, இறையாண்மை மிக்க நாடு இதை ஏற்றுக் கொள்ளாது என்றார்.
உலக நாடுகளிலிருந்து அதிகரித்து வந்த நெருக்கடியைத் தொடர்ந்து கடந்த மாதம் ஒரு கண் துடைப்பு விசாரணைக் கமிஷனை இலங்கை அறிவித்தது என்பது நினைவிருக்கலாம்.
தற்போது ஐ.நா. அமைத்துள்ள விசாரணைக் குழு சுதந்திரமான முறையிலும், நியாயமான முறையிலும் விசாரணை நடத்தினால், விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டால் புதைந்து போன பல உண்மைகள் வெளியாகும் வாய்ப்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications