செம்மொழி மாநாடு-இலங்கை அகதிகள் முகாம்களில் சோதனை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி இலங்கை தமிழர்கள் தங்கியுள்ள அகதிகள் முகாம்களில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி, குளத்துவாய்ப்பட்டி, தாளமுத்துநகர் அடுத்த ராம்தாஸ் நகர் ஆகிய மூன்று இடங்களிலுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில், மொத்தம் 1,838 பேர் வசிக்கின்றனர்.
தமிழகத்தில், சமீபத்தில் விடுதலைப் புலிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாலும், கோவையில் இன்று துவங்கவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் போது, அகதிகள் முகாமில் பிரச்னை ஏதும் வரக்கூடாது என்பதாலும் தூத்துக்குடியில் உள்ள முகாம்களில் கியூ பிரிவு போலீஸாரும், உள்ளூர் போலீஸாரும் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு புதிதாக யாரேனும் வந்துள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. தங்கியுள்ளவர்கள் குறித்தும் பரிசோதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications