எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு காதலி தற்கொலை-காதலனும் தற்கொலை
செங்குன்றம்: நான் சாகப் போகிறேன் என்று காதலனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு காதலி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த காதலனும் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை புழல் பகுதியைச் சேர்ந்த விவேக் (23) தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்தார். இவரும், உறவினரான சாம்ராஜ் என்பவரின் மகள் இலக்கியாவும் (14) 2 வருடங்களாக காதலித்து வந்தனராம்.
இவர்களுக்கு இடையில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டதால், விவேக்குக்கு நான் சாகப்போகிறேன் என்று இலக்கியா நேற்று முன்தினம் எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். பின்னர், எம்.ஜி.ஆர் நகரில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையே எஸ்.எம்.எஸ்.ஐ பார்த்து பதறிப் போன விவேக் எம்.ஜி.ஆர் நகர் சென்றுள்ளார். அங்கு இலக்கியா தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அவர் இலக்கியாவின் வீட்டுக்கு சென்று தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால், இரு வீட்டாரும் சேரந்து காதலர்களின் பிரேதங்களை போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமலேயே சுடுகாட்டில் புதைத்துவிட்டனர்.
இந்தத் தகவல் வெளியே பரவியதையடுத்து புழல் கிராம நிர்வாக அதிகாரி தட்தணாமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications