தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்
சென்னை: கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை வலுத்துள்ளதால் தமிழகத்திலும் சீதோஷ்ண நிலையில்மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நேற்று சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. இன்றும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரத்தநாடு, பாபநாசம், திருவிடை மருதூர், கொடவாசல், மயிலாடுதுறை, கமுதி, மயிலாடி, தக்கலை, வாணியம்பாடி, குமாரப்பாளையம், இளையான்குடி, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய இடங்களில் நேற்று தலா 1 செ.மீ. மழை பதிவானது.
நேற்று மாலைக்கு மேல் சென்னையில் நல்ல மழை பெய்தது. நகரப் பகுதியில் நல்ல மழையாகவும், புறநகர்ப் பகுதிகளில் தூறலாகவும் இது இருந்தது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த நிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை காலை முதல் மேக மூட்டமாக உள்ளது. நல்ல காற்று வீசி வருகிறது. மாலை வாக்கில் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications