For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபாகரன் 'தலைநகரில்' ராஜபக்சே அமைச்சரவை கூட்டம்!

By Chakra
Google Oneindia Tamil News

Rajapakse
கொழும்பு: பிரபாகரன் நிர்வாகத்திலிருந்த தமிழீழத்தின் தலைநகராகத் திகழ்ந்தது கிளிநொச்சி.

மிகச் சிறந்த நிர்வாகம் கொண்ட நகரம் என சர்வதேச பார்வையாளர்களால் பாராட்டப்பட்டது கிளிநொச்சி. இங்குதான் பல வெளிநாட்டு அமைச்சர்கள், பார்வையாளர்கள் பிரபாகரனுடன் சந்திப்பை நிகழ்த்தினர். சரித்திரப் புகழ்பெற்ற பிரபாகரன் - பத்திரிகையாளர் சந்திப்பு நடந்த இடம் இதுதான்.

இதே நகரை இறுதிப் போரில் புலிகள் கைவிட்டுப் பின்வாங்கினர். அதன் பிறகு மக்கள் நடமாட்டமே இல்லாத கிளிநொச்சி ராணுவத்தின் வசம் வந்தது. அங்கிருந்த தமிழர் அடையாளங்கள் அனைத்தையும் புல்டோசர்கள் வைத்து தோண்டிப் போட்ட சிங்கள ராணுவம், இப்போது கிளிநொச்சியை முழு சிங்கள நகரமாக்கி, பெயரைக் கூட சிங்களத்தில் சூட்டியுள்ளது.

கடைகளில் சிங்கள எழுத்துக்கள், புதிய சிங்கள குடியேற்றங்கள் என பகீர் மாற்றங்கள்.

இப்போது இலங்கையின் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தை வரும் 14ம் தேதி கிளிநொச்சியில் நடத்த ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.

இத்தகவலை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இனி, இதே ஸ்டைலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அவர் கூறியதாக இலங்கை தமிழ் இணைய தளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து முல்லைத் தீவிலும் இத்தகைய கூட்டம் நடத்தப்படுமாம்.

தமிழர்களிடம் தகவல் திரட்டும் உளவுப் பிரிவு:

இதற்கிடையே இலங்கையின் கிழக்குப் பகுதிகளில் ராணுவப் உளவுப் பிரிவினர் ரகசிய விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வியாபாரிகள், காப்பீட்டுத் திட்ட முகவர்கள் என்ற அறிமுகத்துடன் தமிழர்களிடம் பல்வேறு தகவல்களை திரட்டி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X