கைதிகளை விடுவிப்பது கொலையாளிகளை ஊக்கப்படுத்தும் செயல்-ஜெ

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கொடநாட்டில் உள்ள அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
செம்மொழி மாநாட்டினை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட ஆயுட் கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்ய திமுக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
மனித சமுதாயத்தில் தவறுகள் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இதை மீறி ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது என்பது சட்டத்திற்கு புறம்பான, கொலையாளிகளை ஊக்கப்படுத்தும் செயல்.
இது கொலை, கொள்ளை போன்ற கொடூர சம்பவங்கள் மேலும் அதிகரிக்க வழி வகுக்கும். சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அரசே, இது போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயலில் ஈடுபடுவது வேதனைக்குரியது.
கச்சத்தீவு, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தொடர் தாக்குதல்; காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, பொன்னையாறு போன்ற அண்டை மாநிலங்களுடனான நதி நீர்ப் பிரச்சனை; நாடாளுமன்றத்தில் அமைச்சர் தமிழில் பேசுகின்ற உரிமை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சிமொழி ஆக்குவது என எந்த உரிமைகளையும் பெற்றுத்தர முடியவில்லை. தமிழ் நாட்டின் அனைத்து உரிமைகளும் பறிபோய் கொண்டிருக்கின்றன.
தமிழக மக்களுக்கு இருக்கின்ற ஒரே உரிமை வாக்குரிமை.
அதையும் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்து வருகின்ற ஆயுள் கைதிகள் மூலம் பறிக்க நினைக்கும் ஜனநாயக விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, ஜனநாயகத்தை சீர்குலைக்கின்ற வகையில் ஆயுட் கைதிகளை விடுதலை செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications