லெபனான்-பேக்டரி இடிந்து விழுந்ததில் இந்தியர் பலி-இன்னொரு இந்தியரைக் காணவில்லை
Subscribe to Oneindia Tamil
பெய்ரூட்: லெபனானின் பெய்ரூட் நகரில் 6 மாடிகளைக் கொண்ட அலுமினியம் தொழிற்சாலை இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் சிக்கி இந்தியத் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். இன்னொரு இந்தியரைக் காணவில்லை.
பெய்ரூட்டின் வடக்குப் பகுதியில் இந்த விபரீதம் நடந்தது. விபத்திலிருந்து லெபனான் நாட்டவர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரி டர்விஷ் ஹோபெய்கா தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து அவர் கூறுகையில், ஸோக் மொஸ்போ என்ற இடத்தில் உள்ளூர் நேரப்படி காலை ஆறே கால் மணியளவில் இந்தக் கட்டடம் இடிந்து விழுந்தது.
கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கியருந்த 35 வயதான லெபனான் நபரை மீட்டுள்ளோம். அதன் பின்னர் இந்தியர் ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
இன்னொரு இந்தியரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரைத் தேடி வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications