கணினித் தமிழ் வளர்ச்சிக்கு ரூ.70 கோடி நிதி தேவை-மு.ஆனந்த கிருஷ்ணன்
கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத்தில் பேசிய அவர், இலக்கியமும் இணையமும் முதல் முறையாக இணைந்து செயல்படும் இந்த காலகட்டத்தில் நடத்தப்படும் இம்மாநாடு தமிழ் வளர்ச்சிக்கு திருப்புமுனையாக அமையும்.
கடந்த 1997ம் ஆண்டில் கணினியில் தமிழ் பயன்படுத்துவதில் முதல் முறையாக பிரச்சனை ஏற்பட்டபோது சிங்கப்ரிபூல் நடத்தப்பட்ட கருத்தரங்கு அதற்கு தீர்வு கண்டது.
அதேபோல் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனும் இணைந்து நடத்திய 2வது தமிழ் இணைய மாநாடு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. இதன் தொடர்ச்சியாக இப்போது 9வது தமிழ் இணைய மாநாடு நடைபெறுகிறது.
இணையத்தில் தமிழ் பல மைல்களைத் தாண்டியுள்ளது. அதே சமயம் சில மைல்களைத் தவறவிட்டுள்ளது. எனவே இணையத் தமிழ் எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், அதை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து இந்த மாநாட்டில் ஆராய்ச்சியாளர்கள் விவாதிக்கின்றனர்.
இந்த மாநாட்டில் கணினி செயல்முறை, வலைப்பூ, விக்கிபீடியா, மின்தரவு, மின் அகராதி, செல்போன்களில் தமிழ் தேடுபொறி, மின் ஆளுமை, தமிழ் டொமைன் பெயர்கள் போன்றவை குறித்த விவாதங்கள், கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.
சென்னை பல்கலைக்கழகத்தில் கணினி மொழியியல் மையம் அமைக்க வேண்டும். தமிழ் தேடு பொறி குறித்து ஆராய கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மையம் அமைக்க வேண்டும்.
மேலும் மின் ஆளுமை, கணினி தொழில்நுட்பம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு கணினித் தமிழை வளர்ச்சி அடையச் செய்ய தமிழக அரசு ரூ.70 கோடி ஒதுக்கி பணிகளைத் தொடங்க வேண்டும் என்றார் ஆனந்த கிருஷ்ணன்.