நாளை முதல் என்எல்சி ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
நெய்வேலி: நெய்வேலி அனல் மின் கழக ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கின்றனர்.
என்.எல்.சி.யில் பணியாற்றும் 15 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு முதல் புதிய ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும். இதற்கான ஒப்பந்தம் போடுவதில் கால தாமதம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக என்எல்சி நிர்வாகத்துடன், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் பாட்டாளி தொழிற்சங்கம் ஆகியவை பேச்சு நடத்தின. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனால் கடந்த 31-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக என்.எல்.சி. நிறுவனத்திடம் தொழிற்சங்கங்கள் நோட்டீஸ் வழங்கின. அதன்படி கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தினர்.
இறுதியாக தொழிற் சங்கத்தினர் நாளை இரவு முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications