ஜாதிவாரி சென்சஸை வலியுறுத்தி சென்னையில் கூட்டம்-ராமதாஸ்,லாலு பங்கேற்பு
சென்னை: ஜாதி வாரி சென்சஸை வலியுறுத்தி சென்னையில் நாளை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
இதுகுறித்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டு மக்கள் மற்றும் இந்திய மக்களின் நீண்ட நாள் கோரிக்கை சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்பதாகும். 2011-ல் மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்ய உள்ளதால் சாதிவாரி கணக்கும் சேர்த்து எடுக்கவேண்டும் என்று அரசியல் கட்சிகளும், பல்வேறு இயக்கங்களும் வலியுறுத்தி வருவதோடு அனைத்து கட்சிகளும் பாராளுமன்றத்தில் வலியுறுத்தி வாதாடி வந்துள்ளதை நாடே அறியும்.
பிரதமர் ஆதரவாக உறுதி அளித்துள்ள நிலையில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் முதல்கட்ட பணிகள் துவங்கியுள்ளது. அரசின் முறையான ஆணை வெளிவரவில்லை.
எனவே சாதிவாரி கணக்கெடுப்பு தவறாமல் நடத்தப்படவேண்டுமென வலியுறுத்தி பா.ம.க. சார்பில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை அடையாறு தொலைபேசி நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், தேசிய தலைவருமான லாலு பிரசாத் யாதவ், பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அன்புமணி ராமதாஸ், ஆர்.வேலு, ஏ.கே. மூர்த்தி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications