ஹபீஸ் குறித்து கருத்து தெரிவித்த பாக். வெளியுறவு அமைச்சருக்கு ப.சிதம்பரம் கொட்டு
Subscribe to Oneindia Tamil

இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பேச்சு சுதந்திரம் உள்ளது. எனவே யாராவது சிலர் எதையாவது பேசினால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சாத்தியமில்லாதது என்று கூறியிருந்தார் குரேஷி.
இதுகுறித்து ப.சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இரு நாட்டு பாதுகாப்பு தொடர்பாகவும், மும்பை தாக்குதல் சம்பவத்திற்குப் பிந்தைய நிலவரம் தொடர்பாகவும், எனக்கும், பாகிஸ்தான் நாட்டின் உள்துறை அமைச்சருக்கும் இடையேதான் பேச்சு நடந்தது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரை நான் சம்பிரதாயத்திற்காகத்தான் பேசினேன். எனவே, எனக்கும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் விளைவுகளை, அவரிடமிருந்து மட்டுமே நான் எதிர்பார்க்கிறேன் என்றார் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications