ருச்சிகா கற்பழிப்பு வழக்கு: முன்னாள் டிஜிபி ரத்தோரின் பென்ஷன் நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சிறுமி ருச்சிகாவை மானபங்கப்படுத்தி அவரது தற்கொலைக்குக் காரணமாக இருந்த வழக்கில் முன்னாள் டிஜிபி ரத்தோருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் முழுமையாக நிறுத்தபப்ட்டுள்ளது.
ருச்சிகா வழக்கில் சொற்ப தண்டனை பெற்றவர் முன்னாள் டி.ஜி.பி. ரத்தோர். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து அரசு நடவடிக்கையில் இறங்கியது. ரத்தோரிடமிருந்து போலீஸ் பதக்கங்கள் பறிக்கப்பட்டன. இந்த நிலையில் அவரது ஓய்வூதியம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
68 வயதாகும் ரத்தோர் கடந்த மே மாதம் 25-ம் தேதி முதல் சிறையில் உள்ளார். இவருக்கு 18 மாத கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை மறுபரிசீலிக்குமாறு பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமனறங்களில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் உடல் நலக்குறைவின் அடிப்படையில் ஜாமீன் வழங்குமாறும் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications