மக்கள் ஆதரவால் பாரத் பந்த் பெரும் வெற்றி பெறும்-வைகோ நம்பிக்கை

பெட்ரோலியப் பொருள் விலை உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து மதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு வைகோ பேசுகையில்,
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை, சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு உயர்த்தியதால், ஏற்கனவே நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் வலைவாசி ஏற்றம் மேலும் கடுமையாக அதிகரித்து உள்ளது.
அனைத்துப் பண்டங்களின் விலையும் மிகவும் உயர்ந்து உள்ளதால், நடுத்தர மக்களும், அடித்தட்டு மக்களும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
அன்றாடங்காய்ச்சிகளும், மாத வருவாயை நம்பி வாழும் மக்களும், தாங்க முடியாத அல்லலுக்கு ஆட்பட்டு உள்ளனர். சமையல் எரி வாயு விலையைக் கூட்டியதால், குடும்பச் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் தாய்மார்கள் துயர்படுகின்றனர்.
மத்திய அரசு தொடர்ந்து கடைபிடித்து வருகின்ற மக்கள் விரோதப் போக்கை கண்டிக்கிறோம். அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் 5ஆம் தேதி நடைபெறும் பந்த் வெற்றிகரமாக நடைபெறும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்..












Click it and Unblock the Notifications