ஆபாச வீடியோவை வெளியிட்ட லெனினைக் கைது செய்யக் கோரி நித்தியானந்தா வழக்கு
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து நித்தியானந்தா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
என்மீது லெனின் என்பவர், போலீசுக்கு பொய்யான தகவல்களை கொடுத்து இருக்கிறார். அது அவருக்கும் தெரியும். எனவே பொய்யான தகவல்களை கொடுத்த லெனின் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்.
லெனின் தனக்கு தெரிந்த மற்றும் தெரியாதவர்களின் உதவியோடு ஆபாச வீடியோ காட்சிகளை திரித்து உள்ளார். எனவே அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் அவரை கைது செய்யவும் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி அரளி நாகராஜ், வருகிற 15ம் தேதிக்குள் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களுடன் போலீஸ் விசாரணை அதிகாரி யோகப்பா ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை அன்றைக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications