மலேசியாவில் கே.பி. மூலம் நிதி திரட்ட இலங்கை முயற்சி

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலங்கையில் நடந்து வந்த, தொடரும் இனப்படுகொலைகள், மனித உரி்மை மீறல் குறித்து காட்டுக்கத்தலாக கத்தியும் எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல் இருந்து வந்த பான் கி மூன் அதுதொடர்பான புகைப்படங்கள்,வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து ஒரு வழியாக கண் திறந்து நிபுணர் குழுவை அறிவித்துள்ளார்.
இதைக் கேட்டதும் இலங்கை காட்டமாகி விட்டது. அது எப்படி எங்களது அனுமதியின்றி இப்படி குழு அமைக்கலாம் என அது கத்திக் கொண்டிருக்கிறது.மேலும், குழு உறுப்பினர்கள் இலங்கைக்கு வர விட மாட்டோம், விசா தர மாட்டோம் எனவும் கூறி வருகிறது.
இலங்கைக்கு ஆதரவாக ரஷ்யா உள்ளிட்ட 29 நாடுகள் ஐ.நா. குழுவை எதிர்த்துள்ளன. ஆனால் பக்கத்து நாடான இந்தியா இதுகுறித்து எதுவும் கூறாமல் இருப்பது ராஜபக்சேவுக்கு உறுத்தலைக் கொடுத்துள்ளதாம்.
இந்தியா அமைதியாக இருப்பதைப் பார்த்தால் இக்குழுவை அது ஏற்பது போல உள்ளதே என்று அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளாராம். இதுகுறித்துக் கவனியுங்கள் என்று வெளியுறவுத் துறைக்கும் அவர் எடுத்துரைத்துள்ளாராம்.
மலேசியாவில் கே.பி. மூலம் நிதி:
இந் நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேசத் தொடர்புத்துறையின் பொறுப்பாளராக இருந்த கே.பி. என்னும் குமரன் பத்மநாதன் மூலம் மலேசியாவில் நிதி திரட்டும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் புனரமைப்புக்காக, இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர்களின் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று கே.பியின் ஏற்பாட்டின் பேரில் மலேசியாவில் நடைபெற்றதாக லக்பீம நியூஸ் இணையத்தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
இந் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தொழிலதிபர்கள் மிகத் தாராளமாக நிதியுதவி செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications