கி. வீரமணி வீடு மீது தாக்குதல்-3 பெரியார் தி.கவினர் கைது
சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அடையாறு கஸ்தூரிபாய் நகரில் வசித்து வருகிறார் வீரமணி. நேற்று காலை திருமண விழாவில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டுக்குப் போயிருந்தார் வீரமணி. வீட்டில் மனைவி, மருமகள், வேலையாட்கள் இருந்தனர்.
இந்த நிலையில் மாலை 3 மணியளவில் ஒரு கும்பல் திடீரென வீட்டுக்குள் புகுந்தது. நேபாள கூர்க்கா பகதூர் அவர்களை தடுக்க முயன்றார். அப்போது கூர்க்காவை அக்கும்பலில் இருந்த 3 பேர் மடக்கிப் பிடித்துக் கொள்ள மற்றவர்கள் உள்ளே போனார்கள்.
உள்ளே சென்ற அக்கும்பல் வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த டொயோட்டோ காரை கடப்பாரையால் அடித்து நொறுக்கினர். இதைப் பார்த்து வீட்டு வேலைக்காரப் பெண் கூச்சலிட்டார். இதையடுத்து தாக்குதல் நடத்திய கும்பல் தப்பி ஓடி விட்டது.
விரைந்து வந்த போலீஸார் கூர்க்கா, வேலைக்கார பெண்ணிடம் தாக்குதல் நடத்திய கும்பல் குறித்து விசாரித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வீரமணியின் மேலாளர் சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்த தாக்குதலில் 7 பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வந்த வாகனத்தை வேறு எங்கோ நிறுத்திவிட்டு, நடந்தே வந்திருக்கிறார்கள். அவர்கள் கைகளில் கடப்பாரை, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள். வந்தவர்கள் அனைவரும் 20 வயதிலிருந்து 30 வயது வரை உடையவர்களாக இருந்துள்ளனர். தாக்குதலில் சேதம் அடைந்த கார் ரூ.27 லட்சம் விலை உடையது என்றார் சீதாராமன்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து வீரமணி வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமைதி காப்போம்-வீரமணி அறிக்கை
இந்த தாக்குதல் குறித்து வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
எனது வீட்டில் இருந்த காவலாளியை சுற்றி 3 பேர் தடிகளுடன் நின்றிருக்க, 4 பேர் வீட்டின் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்த எனது காரை இரும்புத் தடிகளால் அடித்து நொறுக்கி "ஒழிக'' கோஷங்கள் போட்டுக் கொண்டிருந்தனர் என்று எனக்கு தகவல் வந்தது. காவல்துறையினர் விரைந்து வந்து முழு விசாரணையை நடத்துகின்றனர்.
கழக தொண்டர்கள் பதற்றம் அடைய வேண்டாம். சட்டம் அதன் கடமையைச் செய்யும் என்ற முழு நம்பிக்கை நமக்கு உண்டு. ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என்பது போன்ற எந்த நடவடிக்கையிலும் ஆத்திரப்பட்டு இறங்கிவிடக் கூடாது.
பொது வாழ்க்கையில் இப்படிப்பட்ட துரோகங்களை சந்தித்துப் பழக்கப்பட்டவர்கள் நாம். அச்சுறுத்தல்கள் நம்மை ஒன்றும் செய்யாது. சாகத் துணிந்த நமக்கு சமுத்திரம் முழங்கால் கூட அல்ல; கணுக்கால் அளவே. எனவே அமைதி காக்க வேண்டும், கலைஞர் அரசினைக் காக்க வேண்டியதே நமது முதற்கடமை என்பதை மறவாதீர் என்று கூறியுள்ளார்.
பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது:
இந் நிலையில் வீரமணி வீடு மீது நடந்த தாக்குதல் தொடர்பாக, பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அடையாறு போலீசார் விசாரணை நடத்தினார்கள். இரவு முழுவதும் தீவிர விசாரணை நடத்தினார்கள். பலரையும் பிடித்து விசாரித்தனர்.
இதன் அடிப்படையில் தாக்குதல் நடத்திய உமாபதி (24), அருண்குமார் (22), மாரிமுத்து (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் பெரியார் தி.கவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மேலும் இது தொடர்பாக 7 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications