கள்ளக்காதலி வீட்டில் மஜாவாக இருந்த ஏட்டு கைது

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தர்மபுரி அருகே பென்னாகரத்தில் கள்ளக்காதலியுடன் போதையில் உல்லாசமாக இருந்த போலீஸ் ஏட்டை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில், போலீஸ் ஏட்டாக பணிபுரிபவர் குமரன்(48). கடந்த சில ஆண்டுக்கு முன் பென்னாகரம் அடுத்த ஏரியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டு, பணிபுரிந்து வந்தார்.

சீலநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த அம்மாசியின் மனைவியான கள்ளச்சாராய வியாபாரி சுமதி (37) என்பவருடன் குமரனுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு ஜோடியாக சேர்ந்து சுற்றி வந்தனர்.

இது உயர் அதிகாரிகளுக்குத் தெரியவரவே, ஏரியூரிலிருந்து அதியமான் கோட்டைக்கு, குமரன் மாற்றப்பட்டார். இருப்பினும், இவர்கள் இருவருக்கும் இடையேயான கள்ள உறவு தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில், கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப் பணிக்கு சென்று வந்த குமரனுக்கு, மூன்று நாள் விடுமுறை கிடைத்தது.

அந்த மூன்று நாட்களும், அவர் சீலநாயக்கனூரில் தனது கள்ளக் காதலி சுமதியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அப்போது அங்கு சுமதியின் உறவினர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கும், குமரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் குமரன் தாக்கப்பட்டார்.

இத் தகவல் கிராம மக்கள் மத்தியில் பரவியதால் கிராம மக்கள் அனைவரும் சுமதியின் வீட்டில் இருந்த குமரனை சுற்றி வளைத்து பிடித்து ஏரியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் குமரனைக் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+