என்எல்சி தொழிலாளர் ஸ்டிரைக்-பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி

அதேசமயம், தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் உள்ள 14 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களுக்கு 2007-ம் ஆண்டு ஜுலை 1-ந் தேதி முதல் முன்தேதியிட்ட புதிய ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்தக்கோரி அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொ.மு.ச. மற்றும் பாட்டாளி தொழிற்சங்கத்தினர் 30-ந் தேதி இரவு 10 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு 3 கட்ட பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்திருந்தன. இந்த நிலையி்ல் நேற்று சென்னையில் உள்ள நெய்வேலி ஹவுசில் தொடங்கியது. பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் ஆணையர் ஜெகன்னாதராவ் முன்னிலை வகித்தார்.
என்.எல்.சி. சார்பில் தலைமை பொது மேலாளர் லூதர்ஸ், பொது மேலாளர் பெஞ்சமின் ராயப்பா, தொழிற்சங்கம் சார்பில் தொ.மு.ச. தலைவர் செ.குப்புசாமி, என்.எல்.சி. தொழிற்சங்க தலைவர் வீரராமச்சந்திரன், பாட்டாளி தொழிற்சங்க பொதுச் செயலாளர் ஞானசேகரன், என்.எல்.சி. பாட்டாளி தொழிற்சங்க தலைவர் பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர். இரவு 9 மணி வரை நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை.
பின்னர் வெளியில் வந்த குப்புசாமியும், ஞானசேகரனும் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. நிலுவைத்தொகை பற்றிய பிரச்சினையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தம் ஏற்படுவதற்கான அடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. மீண்டும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு இங்கு பேச்சுவார்த்தை நடைபெறும். இதில் உடன்பாடு ஏற்படும் என்று நம்புகிறோம்.
தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது. அதேநேரம் வேலைநிறுத்த போராட்டம் தொடரும். இந்த போராட்டத்தினால் மின் உற்பத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இனியும் பாதிப்பு ஏற்படாது என்றனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications