For Daily Alerts
Just In
பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாபஸ் பெறப்பட மாட்டாது-பிரணாப் திட்டவட்டம்
கொல்கத்தா: பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வு திரும்பப் பெறப்பட மாட்டாது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திரும்பப் பெறுவது, மறு பரிசீலனை செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. இது மிகவும் அவசியமான உயர்வு. இதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்க முயற்சிக்கின்றன என்றார்.
இதற்கிடையே, நாளை நடைபெறவுள்ள பாரத் பந்த் குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்திற்குப் பின்னர் அத்வானி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய அரசியல் வரலாற்றிலேயே அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் பாரத் பந்த் போராட்டத்தில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை என்றார்.
Story first published: Sunday, July 4, 2010, 16:33 [IST]