விருப்ப ஓய்வில் செல்லுமாறு காங்கிரஸ் தலைமையக ஊழியர்களுக்கு உத்தரவு
டெல்லி: காங்கிரஸ்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வரும் பல ஊழியர்களை விருப்ப ஓய்வில் செல்லுமாறுக கட்சி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனராம்.
செலவுக் குறைப்பு நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுகிறதாம். இதுகுறித்து மிக மிக வயதான தலைவர்களில் ஒருவரும், காங்கிரஸ் தலைமையக நிர்வாகியுமான மோதிலால் வோரா கூறுகையில், தற்போது தலைமை அலுவலகத்தில் நிறைய ஊழியர்கள் உள்ளனர். எனவே எண்ணிக்கையைக் குறைக்க வி.ஆர்.எஸ் திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை என்றார்.
இந்தத் திட்டத்தின்படி, விஆர் பெறும் ஊழியர்களுக்கு ஓய்வுக்கால பலன்கள் அனைத்தும் முழுமையாக தரப்படும். மேலும் மீதமுள்ள பணி ஆண்டுகளில் ஆண்டுக்கு 3 மாதம் வீதம் சம்பளம் தரப்படும்.
இந்தத் திட்டத்தால் ஓய்வு வயதை நெருங்கிய ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனராம். ஆனால் கல்யாணமாகாத குழந்தைகளை வைத்துள்ளோர், நடுத்தர வயதுடையவர்களுக்கு பெரும் கவலை ஏற்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து 55 வயதான சங்க்ராம் சிங் என்ற ஊழியர் கூறுகையில், எனக்கு வி.ஆர்.எஸ் மூலம் நல்ல பணம் கிடைத்தால் ஏற்றுக் கொள்வேன் என்றார்.
இன்னும் சில ஊழியர்கள் விஆர்எஸ் தர முன்வராவிட்டால் வேலையை விட்டு நீக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் உள்ளனராம்.
எல்லாம் சரி, பழம் தின்று கொட்டை போட்ட மோதிலால் வோரா என்ற மிக மிக வயதான தலைவர்களுக்கும் காங்கிரஸ் கட்சி வி.ஆர் அல்லது கட்டாய ஓய்வு கொடுக்க முன்வருமா?












Click it and Unblock the Notifications