நெல்லை-தூத்துக்குடியில் ஒரே நாளில் 15 டி.எஸ்.பி.க்கள் மாற்றம்
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 15 டி.எஸ்.பி.க்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஐ.ஜி. லத்திகா சரண் பிறப்பித்துள்ளார்.
விளாத்திகுளம் டி.எஸ்.பி இக்னோஷியஸ் நெல்லை மாநகர டவுன் உதவி கமிஷனராகவும், திருச்செந்தூர் டி.எஸ்.பி நடராஜமூர்த்தி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூருக்கும், ராமநாதபுரம் டி.எஸ்.பி முருகேசன் தூத்துக்குடி கடலோர காவல் படைக்கும், வள்ளியூர் டி.எஸ்.பி ராஜன்ராய் நெல்லை வணிக குற்றப் பிரிவு புனலாய்வு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
நெல்லை டி.எஸ்.பி பெஸ்கி திண்டுக்கல் போதை தடுப்பு பிரிவுக்கும், அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி கோபாலன் ராமநாதபுரம் சமூக நீதி உரிமைகள் மற்றும் மனித உரிமை பிரிவுக்கும், நாங்குநேரி டி.எஸ்.பி உதயகுமார் விழுப்புரம் அருகேயுள்ள கோட்டைகுப்பத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
சேரன்மகாதேவி டி.எஸ்.பி தங்கதுரை பல்லடத்திற்கும், புளியங்குடி டி.எஸ்.பி பாஸ்கரன் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு ஆவண காப்பகத்திற்கும், நெல்லை டி.எஸ்.பி அந்தோணி ஞானசேகர் நாகப்பட்டிணம் கடலோர காவல்படைக்கும், மதுரை தல்லாக்குளம் உதவி கமிஷனர் இலங்கேஸ்வரன் நெல்லை மாநகர மதுவிலக்கு பிரிவு உதவி கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட பேரூரணி காவலர் பயிற்சி பள்ளி டி.எஸ்.பி சுனந்தபசுபதி நெல்லை போலீஸ் பணியிடை பயிற்சிக்கும், அருப்புகோட்டை டி.எஸ்.பி ஷாஜகான் நெல்லை மாவட்ட மதுவிலக்கு பிரிவிற்கும், திருப்பூர் மாவட்டம் அவினாசி உதவி கமிஷனர் காமராஜ் நெல்லை மாநகர குற்றப்பிரிவு ஆவண காப்பகத்திற்கும், பாளை குற்றபிரிவு உதவி கமிஷனர் பரமானந்தம் சென்னை புறநகர் குற்ற ஆவண காப்பகத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.