ஈழத் தமிழர்களை விடுதலை செய்யக் கோரி மலேசியப் பாராளுமன்றம் நோக்கி பேரணி!
மலேசியா : மலேசியாவில் இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 75 ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். இல்லையெனில் பாராளுமன்றம் நோக்கி பேரணி மற்றும் ஆர்பாட்டம் நடைபெறும் என்று மாற்று செயலணி என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை வதை முகாம்களில் இருந்து தப்பித்து மலேசிய இருட்டறை முகாம்களில் தவித்துக்கொண்டிருக்கும் 75 ஈழத் தமிழர்களை அகதிகளாக ஏற்றுக் கொண்டது ஐ.நா. சபை. ஆனால், ஐநா அகதிகளாக ஏற்றுக் கொண்ட பிறகும் அவர்களை மலேசிய அரசு விடுதலை செய்யாமல் உள்ளது.
இந்த நிலையில், இருட்டறை சிறையில் உள்ளவர்களை இன்னும் ஒரு வாரத்திற்குள் விடுதலை செய்ய வேண்டும். மேலும், அவர்களுக்கு அகதிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இவைகள் மறுக்கப்படும் பட்சத்தில் மலேசிய பாராளுமன்றம் நோக்கி தமிழர்களை ஒன்றினைத்து பேரணி நடக்கும் என்று மாற்று செயலணி என்ற அமைப்பு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications