இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவோரை தண்டிக்க புது சட்டம்: துரைமுருகன்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் விடுமுறை கால குடும்ப நல நீதிமன்ற துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துரைமுருகன் பேசுகையில்,
இந்தியாவிலேயே தலைசிறந்த நீதியரசர்களையும், புகழ் பெற்ற வழக்கறிஞர்களையும் தமிழ்நாடு உருவாக்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக செல்வோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தான் நுழைவு வாயிலாக உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 153 புதிய நீதிமன்றங்கள் கட்டப்பட்டுள்ளன. 190 சிவில் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிது புதிதாக நீதிமன்றங்கள் கட்டப்படுவதுடன் நீதிபதிகளும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனாலும் வழக்குகள் குறைந்தபாடில்லை. வளரும் சமுதாயத்தில் குற்றங்கள் அதிகரிகத்தான் செய்யும்.
சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் 14,160 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு விரைந்து தீர்வு காண்பதற்குத்தான் இந்த விடுமுறை கால நீதிமன்றங்கள் துவக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சில பேர் வெளிநாட்டு பிரச்சனையை மையப்படுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேச்சுரிமை என்ற போர்வையில் பேசி வருகிறார்கள். அத்தகைய நபர்களை தண்டிக்க தற்போது சட்டங்கள் உள்ளன. ஆனாலும் அத்தகைய நபர்கள் இனி புதிய சட்டத்தையும் சந்திக்க வேண்டும். இவர்களை தண்டிக்க விரைவில் கடுமையான சட்டம் கொண்டு வரப்படும் என்றார் துரைமுருகன்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications