மீண்டும் விண்வெளிக்குச் செல்லும் சுனிதா வில்லியம்ஸ்
இதற்கு முன் 2006ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி முதல் 2007ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி வரை விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை நடத்தினார் சுனிதா.
இதன்மூலம் விண்வெளியில் நீண்ட நாள்கள் தங்கியிருந்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
அதே ரோஸ விண்வெளியில் அதிக நேரம் நடந்த முதல் வீராங்கனை என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
விண்வெளியில் கொலம்பியா விண்கல விபத்தில் பலியான கல்பனா சாவ்லாவைத் தொடர்ந்து விண்வெளிக்குச் சென்ற 2வது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தான்.
சுனிதாவின் தந்தை தீபக் பாண்ட்யா, தாயார் உர்சலின் பாண்ட்யா ஆகியோர் இந்தியாவில் பிறந்தவர்கள். சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்காவில் பிறந்து புளோரிடா தொழில்நுட்பக் கழகத்தில் எம்.எஸ். பட்டம் படித்தவர்.
இந் நிலையில் 2012ம் ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் விண்வெளி மையத்துக்குச் செல்லும் சுனிதா இந்த முறையும் நீண்ட நாட்கள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வார் என்று தெரிகிறது.