நக்சலைட்டுகள் அட்டூழியம்: பீகாரில் 11 பேர் கடத்தல்
கைமூர்: பீகாரில் 11 பேரை மாவோயிஸ்ட் நக்சலைட்கள் கடத்திச் சென்றனர்.
அன்மைக்காலமாக நக்சலைட்டுகளின் அட்டகாசம் அதிகரித்து விட்டது. அதை அடக்க மத்திய, மாநில அரசுகள் கூட்டாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் நக்சலைட்டுகள் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் உள்ளது லோடா என்ற கிராமம். நேற்றிரவு அங்கு திடீரென 60 நக்சலைட்டுகள் வந்தனர். அவர்களிடம் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. அவர்கள் வீட்டில் இருந்த பொதுமக்களை தெருவிற்கு இழுத்து வந்தனர்.
அந்த கிராமத்தில் இருந்து 11 பேரை கடத்தி சென்றனர். கடத்தப்பட்டவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. மத்தியபடை மற்றும் உள்ளூர் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அருகில் உள்ள வனப்பகுதியில் அவர்களை மறைத்து வைத்திருக்கலாம் என்பதால் அந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications