எல்டிடிஇ ஆதரவாளர் என்ற சந்தேகத்தில் சென்னை வந்த தமிழர் கொழும்பு திருப்பி அனுப்பப்பட்டார்
சென்னை: கொழும்புவில் இருந்து சென்னை வந்த இலங்கைத் தமிழர் ஒருவர், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்ற சந்தேகத்தின் பேரில் திருப்பி அனுப்பப்பட்டார்.
இலங்கையை சேர்ந்த தமிழர் கிலியோன் என்ற சாந்தயோகி (47). நேற்று காலை 4.30 மணி அளவில் இவர் கொழும்புவில் இருந்து சென்னை விமானம் நிலையத்தில் வந்திறங்கினார்.
குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் வழக்கம் போல் பயணிகளை சோதனை செய்தனர். அப்போது, சாந்தயோகியின் ஆவணங்களை பார்த்த அதிகாரிகள் அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளராக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். இதனால், அவரை அனுமதிக்க மறுத்தனர்.
இதையடுத்து விமான நிலையத்திலேயே வைத்து விசாரித்த பின் அவரை பகல் 12.30 மணிக்கு கொழும்புவுக்கு திருப்பி அனுப்பினர்.
சாந்தயோகி தமிழகத்தில் உள்ள பவானிசாகர் அகதிகள் முகாமில் இருந்தவர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் கொழும்பு சென்றார். அவருடைய மனைவி, மகன் ஆகியோர் இன்னும் அந்த முகாமில் உள்ளனர். அவர்களை சந்திக்க வந்தபோது தான் அவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications