விடுதலைப் புலிகள் தலைநகரில் இலங்கை அரசின் அமைச்சரவைக் கூட்டம்

ராஜபக்சே அரசின் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.
பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைநகரமாக திகழ்ந்தது
கிளிநொச்சி நகரம். இங்குதான் பலமுக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. ஈழப் போரின்
இறுதிக்கட்டத்தில் கிளிநொச்சி சிங்களப் படைகளிடம் வீழ்ந்தது.
தற்போது ராணுவத்தின் பிடியில் உள்ள கிளிநொச்சியில் அமைச்சரவைக் கூட்டத்தை
நடத்தி தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்பினார் ராஜபக்சே. இதையடுத்து அங்கு
அமைச்சரவைக் கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது.
கூட்டத்தில் ராஜபக்சே தமிழில் பேசியதாக கூறப்படுகிறது. பின்னர்
செய்தியாளர்களிடம் ராஜபக்சே பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
இந்த பகுதியில் அனைத்து வளர்ச்சி பணிகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி, முல்லைதீவு பகுதிகள் முன்பு பின்தங்கிய பகுதியாக இருந்தன. இனி இந்த
நிலை மாறிவிடும்.
எனக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுதான். எல்லா மக்களுக்கும் ஒரே மாதிரி வசதி
வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். சமத்துவம், சமஉரிமை, ஒரே
நாடு, ஒரே மக்கள், ஒரே நீதி இதுதான் எனது வழி. நாட்டில் எல்லோரும் சுய
கவுரவத்துடன் வாழ வேண்டும். அதை நான் நிறைவேற்றுவேன்.
இனவாதம், பிரிவினைவாதம், இனி வேண்டாம். இந்த நாட்டில் சிறுபான்மையினர் என்று
யாரும் இல்லை. நாட்டின் மீது அன்பு செலுத்தும் அனைவரும் இலங்கை மக்களே.
எப்போதும் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் மக்களை தவறான
வழிகளில் கொண்டு செல்லக்கூடாது என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications