தமிழகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: தமிழகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த அறிவிப்புகளை உள்துறை செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார்.
சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்து வந்த ஷியாம் சுந்தர், மாநில மனித உரிமை ஆணைய கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
அவர் வகித்து வந்த சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில மனித உரிமை ஆணைய கூடுதல் டிஜிபி செண்பகராமன், அமலாக்கப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி எஸ்.பியாக மாற்றப்பட்ட கோவை எஸ்.பி. கண்ணனின் இடமாற்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து கோவை எஸ்.பியாக பணியாற்றுவார்.
அதேபோல கோவை எஸ்.பியாக மாற்றப்பட்ட நீலகிரி எஸ்.பி. கபில் குமார் சரத்கரின் உத்தரும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவைக்குப் பதில் அவர் தூத்துக்குடிக்கு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி எஸ்.பியாக இருந்து வந்த செந்தில்குமார் நீலகிரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications