தீண்டாமையை ஒழிக்க கோவையில் சட்ட உதவி மையம்-சிபிஎம் அமைத்தது
கோவை: தமிழகத்தில் தீண்டாமையை ஒழிக்கும் நோக்கில் கோவையில் டாக்டர் அம்பேத்கர் சட்ட உதவி மையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
பல்வேறு தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் தலித் மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்துடன் இணைந்து, டாக்டர் அம்பேத்கர் சட்டஉதவி மையம் துவக்க விழா கோவையில் நடைபெற்றது.
இந்த சட்ட மையத்தினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் துவக்கி வைத்துப் பேசினார்.
அவர் பேசுகையில், தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் வகையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்துடன் இணைந்து, கோவையில் துவங்கப்பட்டுள்ளது டாக்டர் அம்பேத்கர் சட்ட உதவி மையம்.
இது போன்று, சென்னை, மதுரை, கோவை போன்ற இடங்களிலும் இந்த மையம் துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த விழாவிற்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில செயற் குழு உறுப்பினர் வி.சுந்தரமூர்த்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சி.வெண்மணி, கோவை மாவட்ட அமைப்பாளர் யு.கே. சிவஞானம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications