Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐபிஎல் ஊழல்-இம்மாத இறுதிக்குள் அமலாக்கப் பிரிவின் விசாரணை அறிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐபிஎல் பணப் பரிவர்த்தனை உள்ளிட்டவை குறித்து விசாரித்து வரும் அமலாக்கப் பிரிவு இந்த மாத இறுதிக்குள் தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும் எனத் தெரிகிறது.

ஐபிஎல் அணிகள் வாங்கப்பட்டதிலும், அதன் நிர்வாகத்திலும் பெருமளவில் பண மோசடிகள், முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்தும், ஐபிஎல் அணிகளில் முதலீடு செய்திருப்போர் குறித்தும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பான விசாரணை அறிக்கை இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐபிஎல் அணிகளில் முதலீடு செய்துள்ள தனி நபர்கள், நிறுவனங்கள் குறித்த முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டு விட்டதாம். மேலும், மொரீஷியஸ், கேமேன் தீவுகள் ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.

இந்த மாத இறுதியில் அனைத்து விவரங்களும் அடங்கிய முழு விவர அறிக்கை நிதியமைச்சக்திடம் சமர்ப்பிக்கப்படும்.

ஐபிஎல் டுவென்டி 20 தொடரில் புழங்கிய கருப்புப் பணம் குறித்த விவரங்களை வெளிக் கொணருவதே இந்த விசாரணையின் முக்கியநோக்கமாக இருந்தது.

ஐபிஎல் கொச்சி அணிதொடர்பான விவகாரம் வெடித்ததைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கப் பிரிவின் விசாரணை தொடங்கியது.

கொச்சி அணி தொடர்பாக வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருந்த சசி தரூருக்கும், ஐபிஎல்லின் ஆணையராக இருந்த லலித் மோடிக்கும் இடையே மோதல் வெடித்தது. கடைசியில் இருவரும் பதவிகளை இழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+