விரைவில் திமுகவுக்கு ராகுல் காந்தி டாட்டா காட்டுவார்-கூறுகிறார் நாஞ்சில் சம்பத்

Subscribe to Oneindia Tamil

Nanjil Sampath
ஈரோடு: திமுகவுக்கு டாட்டா காட்ட தயாராகி விட்டார் ராகுல் காந்தி. இதனால் சோனியா காந்தியை சமாதானப்படுத்தும் முயற்சியில் முதல்வர் கருணாநிதி இறங்கியுள்ளார் என்று மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

ஈரோட்டில் மதிமுக தொண்டர் அணி சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடந்த பொதுக் கூட்டத்தில் சம்பத் பேசுகையில்,

சீமானைத் தொடர்ந்து என்னையும், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்தன. அதற்காக நான் பேசும் இடங்களில் எல்லாம் அரசின் ஒற்றர்கள் என்னை கண்காணித்து வருகிறார்கள்.

நான் ஏற்கனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தை சந்தித்தவன். அரசின் அடக்குமுறைகளை கண்டு அஞ்சுவன் அல்ல இந்த வைகோவின் தம்பி சம்பத்.

தமிழக முதலமைச்சர் கருணாநிதி எதிர்கட்சிகளே இயங்க கூடாது என நினைக்கிறார். எதிர்கட்சி இல்லாத ஜனநாயகம் அதன் இயல்பை இழந்துவிடும்.

கருணாநிதியின் நடவடிக்கைகளை பார்த்து ராகுல்காந்தி திமுகவுக்கு டாட்டா காட்ட தயாராகி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால் அவர் சோனியா காந்தியை திருப்திபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் என்றார் சம்பத்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+