வருமான வரிக்கான ரிட்டர் தாக்கல்-சென்னையில் 40 சிறப்பு கவுன்டர்கள் அமைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரி செலுத்தியது தொடர்பான ரிட்டர்னைத் தாக்கல் செய்ய வருகிற 31ம் தேதியுடன்கடைசிநாள் என்பதால் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக சென்னையில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் 40 சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்படுகின்றன.

2009-10ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதி கடைசி நாளாகும். இதையடுத்து பெருமளவிலானார் கணக்குகளை தாக்கல் செய்ய ஆரம்பித்துள்ளனர். வழக்கமாக கடைசி நாட்களின்போதுதான் பெருமளவில் தாக்கல் செய்ய வருவார்கள்.

இதனால் கடைசி நாட்களில் கூட்டம் நிரம்பி வழியும். இதைக் கருத்தில் கொண்டு சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னை வருமான வரி அலுவலகத்தில் 40 சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்படுகின்றன. இவை ஜூலை 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை செயல்படும்.

இந்த நாட்களில் தினசரி காலை 9.45 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த சிறப்பு கவுன்டர்கள் செயல்படும். இதில், மூத்த குடிமக்கள், மாற்றுத்
திறனாளிகளுக்காக தனியாக ஒரு கவுன்டர் செயல்படும்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்த சிறப்பு கவுன்டர்களில் தாம்பரம், காஞ்சிபுரத்தில் அடங்கியுள்ள சென்னை புறநகர்களைசத் சேர்ந்த மாதச் சம்பளதாரர்களும் ரிட்டர்னைத் தாக்கல் செய்யலாம்.

கணக்கு தாக்கலின்போது கண்டிப்பாக பான் எண்ணை குறிப்பிட வேண்டும். இது இல்லாத சரல் படிவங்கள் ஏற்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வசதிக்காக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் சரல் படிவத்தை www.incometaxindia.gov.in என்ற இணையதளம் மூலமும் டவுன்லோடு செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+