குற்றாலத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வந்த ஏட்டு திடீர் மரணம்
குற்றாலம்: குற்றாலத்தில் பாதுகாப்புப் பணிக்கு வந்த தலைமைக் காவலர் திடீரென மரணம் அடைந்தார்.
வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்தவர் கணேசன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் குற்றால சீசன் பாதுகாப்பு பணிக்கு வந்தார்.
நேற்று இரவு பழைய குற்றாலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது கணேசனுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடு்த்து அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கு இறந்தார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடல் சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகே உள்ள ரெட்டியாபட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. கணேசனுக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு எஸ்.ஐ. சுந்தரைய்யா என்பவர் கடையநல்லூருக்கு மாற்று பணிக்கு சென்றார். அப்போது அவருக்கும் திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications