பெண் டாக்டருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.கள்: 4 பேர் கைது
நெல்லை: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பெண் டாக்டருக்கு செல்போனில் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி நேதாஜி நகர் நடராஜன், பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரம் பால்ராஜ், மூன்றடைப்பு சுப்பிரமணியன், சிந்துபூந்துரை பாலகிருஷ்ணன் ஆகியோர் பல்வேறு இடங்களுக்கு சென்று எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருவது வழக்கம்.
கடந்த சில தினங்களுக்கு முன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சில பழுது வேலை செய்ய வந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த ஒரு பெண் டாக்டரின் செல்போன் நம்பரை எப்படியோ தெரிந்து கொண்டனர். வேலை முடிந்து ஊர் திரும்பிய அவர்கள் அந்த டாக்டரின் செல்போனுக்கு அடிக்கடி ஆபாச எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பினர்.
பணியில் இருந்த டாக்டருக்கு அந்த எஸ்.எம்.எஸ்.கள் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இது குறித்து அவர் ஐகிரவுண்ட் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்து உள்ளிட்ட போலீசார் டாக்டரின் செல்போனுக்கு வந்த நம்பரை வைத்து விசாரணை நடத்தினர்.
இதில் எஸ்.எம்.எஸ் அனுப்பியது மருத்துவமனையில் வேலை பார்த்த எலக்ட்ரீசியன்கள் தான் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications