ரஞ்சிதா ஒரு மிகச் சிறந்த பக்தை-நித்யானந்தா பாராட்டு
தனது ஆசிரமத்தில் வைத்தே ரஞ்சிதாவுடன் ஆபாச செயலில் ஈடுபட்டு பிடிபட்டு கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார் நித்யானந்தா.
இந் நிலையில் அவரது தியான பீட ஆசிரமத்தின் இணையத்தளத்தில் நித்யானந்தாவின் புதிய வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது. அதில் நித்யானந்தா தோன்றி ரஞ்சிதா பற்றி கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
என் மீது யாருக்கும் தனிப்பட்ட முறையில் விரோதம் இருந்தால், என்னைப் பழிவாங்க வேண்டும் என்று கருதினால், அதை செய்யலாம்.
அதை விட்டுவிட்டு அப்பாவியான எனது பக்தர்களை பழிவாங்குவது எந்த விதத்தில் நியாயம்?.
நான் எப்போதுமே பொதுமக்கள் மத்தியில் தான் இருந்து வருகிறேன். என்னைப் பழிவாங்க வேண்டும் என்றால் அது சுலபம்.
ஆனால் நடந்தது என்ன?. எனது பக்தர்கள் மீது பெயரையும் புகழையும் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஞ்சிதா ஒரு மிகச் சிறந்த பக்தை. மிக உத்தமமான பக்தை. இந்த அமைப்புக்காக அவர் எவ்வளவோ சேவைகளை செய்துள்ளார். அப்படிபட்ட ஒருவருக்கு, அவரை சார்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
இது எனக்குத் தாங்க முடியாத துயரத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி விட்டது. ரஞ்சிதாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆசீர்வாதங்கள் எப்போதும் உண்டு.
என்னைப் பழி வாங்க நினைப்பவர்களுக்கு எனது வேண்டுகோள் இது தான். தயவு செய்து என் மீது வெறுப்பு இருந்தால் அதை என்னிடம் மட்டும் காட்டுங்கள். அப்பாவிகளான எனது பக்தர்களை எந்த விதத்திலும் தொல்லைப்படுத்தாதீர்கள். அதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது என்று கூறியுள்ளார் நித்யானந்தா.