டெண்டுல்கர் ஓபஸ் சுயசரிதை சிறப்புப் பதிப்பில் எனது ரத்தம் இல்லை-சச்சின் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

Tendulkar Opus
டெல்லி: டெண்டுல்கர் ஓபஸ் என்ற தனது சுயசரிதை நூலின் சிறப்புப் பதிப்பில் எனது ரத்தம் இடம் பெற்றதாக வெளியான தகவல் சரியில்லை என்று டெண்டுல்கர் கூறியுள்ளார்.

டெண்டுல்கர் ஓபஸ் என்ற பெயரில் சச்சினின் சுயசரிதை நூல் வெளியிடப்பட்டது. இதன் சிறப்புப் பதிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்படவுள்ளது. இதில் சச்சினின் ரத்தத்தில் ஆன கையெழுத்து இடம் பெறுவதகாக தகவல்கள் வெளியாகின.

மொத்தமே பத்து பிரதிகள் மட்டுமே வெளியிடப்படவுள்ளதாகவும், அவையும் கூட முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும், இந்த நூலின் விலை ரூ. 37.5 லட்சம் என்றும் கூறப்பட்டது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிரிக்கெட் வீரரின் சுயசரிதை புத்தகத்திற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா என்ற சர்சத்சையும் எழுந்தது. ஆனால் ரத்தக் கையெழுத்து இடம் பெறவில்லை என்று சச்சின் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அந்த புத்தகத்தில் எனது ரத்தம் இடம் பெறவில்லை. அந்த புத்தகம் புகைப்படங்கள் நிறைந்தது. சுயசரிதை கிடையது. நான் தற்போது விளையாட்டில் தான் அதிககவனம் செலுத்தி வருகிறேன்.

கடந்த வியாழக்கிழமை தான் எனக்கு இந்த தகவல் தெரிந்தது. இதில் எந்தவித உண்மையும் இல்லை. இந்த புத்தகம் அறக்கட்டளை உதவிக்காக வெளியிடப்படுகிறது. வெவ்வேறு விலைகளில் இந்த புத்தகம் வெளியாகிறது. இந்தியா முழுவதும் உள்ள நூலகங்களில் இந்த புத்தகம் இலவசமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+