நரேஷ்குப்தாவின் நைஜீரிய பயணத்திற்கு தமிழக அரசு அனுமதி
சென்னை : தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, நைஜீரிய நாட்டுக்கு சென்று அங்குள்ள தேரத்ல் ஆணையத்திற்கு தேர்தல் தொடர்பான அறிவுரைகளை வழங்க அனுமதிக்க முடியாது என்று கூறிய தமிழக அரசு, பயணத்துக்கான செலவுகளை தேர்தல் ஆணையமே ஏற்கும் என்று தெரிவித்ததால், அனுமதி அளிப்பதாக தெரிவித்துள்ளது.
நைஜீரியாவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடந்து வரும் தேர்தல் முறைகளைப் பின்பற்ற விரும்பிய அந்த நாட்டு அரசு, இதற்காக ஒரு அதிகாரியை அனுப்பி வைக்குமாறு தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டிருந்தது.
இதையடுத்து நேர்மையானவரும், நியாயமானவரும், நடுநிலை வழுவாதவரும், தேர்தல் நடைமுறைகளில் நிரம்பிய அனுபவம் வாய்ந்தவருமான நரேஷ் குப்தாவை அனுப்பி வைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது.
ஆனால் தமிழக அரசு இதற்கான அனுமதியைத் தரவில்லை (நரேஷ் குப்தாத தமிழக அரசு கேடரில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி என்பதால் தமிழக அரசின் அனுமதி அவசியம்). செலவுகளை தேர்தல் ஆணையம் ஏற்றால் அனுமதி தருவோம் என்று தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி கூறியிருந்தார்.
இதையடுத்து தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியது. நரேஷ் குப்தாவின் பயணத்துக்கான செலவை தமிழக அரசு தரத் தேவையில்லை. நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து தற்போது நரேஷ்குப்தாவின் நைஜீரிய பயணத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து நைஜீரியா செல்கிறார் நரேஷ்குப்தா. 28ம் தேதி தனது பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்புவார்.












Click it and Unblock the Notifications