கருணாநிதி-அழகிரி பற்றி விமர்சனம்: எஸ்.எஸ்.சந்திரன் மீது அவதூறு வழக்கு
ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குண்டு பகுதியில் அதிமுக சார்பில் நேற்று கண்டன பொதுக் கூட்டம் நடந்தது.
முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், வளர்மதி, அதிமுக கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், நடிகர் ராமராஜன், தேனி மாவட்ட அதிமுக செயலாளர் தங்க தமிழ்செல்வன், உள்பட பலர் பேசினர்.
எஸ்.எஸ்.சந்திரன் பேசுகையில், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆகியோரை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தார். இதையடுத்து அவதூறாகப் பேசியதாக கடமலைக்குண்டு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளர்.
இதேபோல தேனி மாவட்ட துணைச் செயலாளர் ராமர் மீதும் அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கடமலைக் குண்டுவில் நடந்த பொதுக் கூட்டத்தில் வளர்மதி பேசுகையில் மிக அவதூறாகப் பேசவே, அதைத் தடுக்க முயன்ற போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
வளர்மதியை போலீசார் மேடையிலை வைத்து கைது செய்ய முயன்றதாக அதிமுகவினர் குற்றம் சாட்டினர்.