நிலம் வாங்கும் எஸ்.டி., எஸ்.சி. பெண்களுக்கு முழு சலுகை: தமிழக அரசு
நெல்லை: தமிழகத்தில் தட்கோ நிதியுதவியுடன் நிலம் வாங்கும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பெண்களுக்கு முத்திரை மற்றும் பதிவு கட்டணம் செலுத்துவதில் இருந்து 100 சதவிகிதம் சலுகை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் அவர்களுக்கு நிலம் வாங்கும் தி்ட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நிலம் கிரையம் பெறும் பெண்களுக்கு அக்கிரையம் தொடர்பான முதல் கிரைய ஆவணத்தி்ற்கு முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் செலுத்துவதில் இருந்து 75 சதவிகிதம் சலுகை அளிக்கப்பட்டு வந்தது.
மீதமுள்ள 25 சதவிகித முத்திரை மற்றும் பதிவு கட்டணம் பயனாளிகளால் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை வழங்கப்பட்டு வந்த 75 சதவிகித சலுகையை தற்போது 100 சதவிகிதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.