5-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த வாலிபர் கைது
தென்காசி: தென்காசி அருகே சிறுமியை சீரழித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி அருகேயுள்ள இடைகால் துரைசாமிபுரம் காலனியை சேர்ந்தவர் சாந்தி. இவரது தங்கை மகள் ஷோபனா. இவர் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் பெற்றோர் சென்னை அருகே செங்கல் சூளையில் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
நேற்று மாலை ஷோபனாவை காணாமல் பெரியம்மா சாந்தி பல இடங்களில் தேடியுள்ளார். இறுதியாக அங்குள்ள சமுதாய நலக்கூடம் அருகே சென்றபோது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அங்குள்ள மாடிக்கு சென்று பார்த்தபோது அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் முத்து ராஜ் ஷோபனாவை கற்பழித்துக் கொண்டிருந்ததை பார்த்து சாந்தி அலறியுள்ளார்.
அலறல் சத்தத்தை கேட்ட ஊர் மக்கள் திரண்டு வந்து சிறுமி ஷோபனாவை சீரழித்த முத்துராஜை பிடித்து இலத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். சிறுமியை அழைத்து விசாரித்த போலீசார் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து முத்துராஜை கைது செய்தனர்.
இச்சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications