நரேஷ் குப்தாவுக்கு அடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரி யார்?
சென்னை: நரேஷ் குப்தாவுக்கு அடுத்து வரப் போகும் தலைமைத் தேர்தல் அதிகாரி யார் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
இதுவரை நான்கு பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியலை தமிழக அரசு தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அதிலிருந்து ஒருவர் இப்பதவிக்கு நியமிக்கப்படுவார்.
கண்டிப்புக்கும், நேர்மைக்கும் பெயர் போன நரேஷ் குப்தா தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் வசவுகளையும் பெருவாரியாக சம்பாதித்துக் கொண்டவர். காரணம், யாருக்கும் அடிபணியாமல் அவர் நடந்து கொண்டதால்.
அப்படிப்பட்ட நரேஷ் குப்தாவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. அவருக்கு பதவி நீட்டிப்பு தர தேர்தல் ஆணையம் விரும்பியது. அவரது திறமையும், பணி அனுபவமும், வருகிற தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என தேர்தல் ஆணையம் கருதியது. ஆனால் பணி நீட்டிப்பை குப்தா விரும்பவில்லை.
தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான அரசியல் அழுத்தங்களை இனியும் தாங்க அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பணி நீட்டிப்பை அவர் வேண்டாம் என்று கூறி விட்டார்.
இதையடுத்து புதிய அதிகாரியை நியமிக்கும் வேலையில் தேர்தல் ஆணையம் மும்முரமாக உள்ளது.
இதையடுத்து தமிழக அரசிடம் 3 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியலை கேட்டிருந்தது தேர்தல் ஆணையம். முதலில் அனுப்பப்பட்ட பட்டியலில் இருந்த மூன்று பேரையும் நிராகரித்த தேர்தல் ஆணையம் தற்போது மேலும் 3 பேர் கொண்ட பட்டியலை பெற்றுள்ளது.
இதுபோக தமிழக அரசின் நிதித்துறை செலவுப் பிரிவு செயலாளராக இருக்கும் பிரவீன் குமார் பெயரையும் தேர்தல் ஆணையத்திற்குப் பரிந்துரைத்துள்ளது.
இவரும் கண்டிப்புக்குப் பெயர் போனவர் என்று கூறப்படுகிறது. மேலும், அரசியல்சார்பற்றவரும் கூட என்றும் தெரிகிறது. எனவே இவர் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
-
லண்டன் டூ சென்னை.. ரூ. 400 கோடி சொத்து.. சங்கீதாவின் 'சைலண்ட்' சாம்ராஜ்யம்? எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்! -
ரூ.160 லட்சம் கோடி.. உலகப் பொருளாதாரத்தின் 'இதயத் துடிப்பை' நிறுத்திய ஈரான்.. அராம்கோ மீதே அட்டாக்! -
கடைசியில் ஒரு வழியா வருது.. சென்னை லூலூ மால்.. தொடங்குது கட்டுமானம்.. எங்கே வருது தெரியுமா? -
ஈரான் எதிர்பாராத அட்டாக்.. பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெரிய கேஸ் ஆலைகள் மூடல்! உலகிற்கே பாதிப்பு -
ராகுலுக்கு செக்.. செங்கோட்டையை நோக்கி ‘சூரியன்’.. ஸ்டாலினின் 3வது அணி ரெடி.. உடையும் இந்தியா கூட்டணி -
வேற யாராவதுன்னா ஜெயில்தான்.. விஜய்யை கட்டிப்போட்ட அந்த 25 பேஜ்.. அதிர்ச்சி தரும் 4 முக்கிய புகார்கள்! -
வாயை கூட திறக்காத சீனா.. ஈரான் விவகாரத்தில் ட்விஸ்ட் கொடுக்கும் ஜின்பிங்.. என்ன மேட்டர் தெரியுமா? -
99% எல்லாம் ஓவர்.. 24 மணி நேரம்தான் டைம்.. ராகுல் காந்திக்கு ஸ்டாலின் டெட் லைன்.. காங்கிரஸ் ஷாக் -
இஸ்ரேலை நோக்கி.. செஜில் வகை ஏவுகணைகளை வீச தொடங்கியது ஈரான்! ரொம்ப கஷ்டம்! -
தொடக்கூடாத கையைத் தொட்டதா ஈரான்? ஜப்பான் செய்த அதே தவறு.. 30 விநாடியில் மாறப்போகும் உலக வரைபடம்! -
ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்ததற்காக கார் ஓட்ட மறுத்தாரா டிரைவர்? வைரல் வீடியோவிற்கு விளக்கம் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி ரோகிணிக்கு தெரிந்த உண்மை.. வீட்டை விட்டு போன மீனா! முத்து எடுத்த முடிவு












Click it and Unblock the Notifications