நரேஷ் குப்தாவுக்கு அடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரி யார்?
சென்னை: நரேஷ் குப்தாவுக்கு அடுத்து வரப் போகும் தலைமைத் தேர்தல் அதிகாரி யார் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
இதுவரை நான்கு பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியலை தமிழக அரசு தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அதிலிருந்து ஒருவர் இப்பதவிக்கு நியமிக்கப்படுவார்.
கண்டிப்புக்கும், நேர்மைக்கும் பெயர் போன நரேஷ் குப்தா தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் வசவுகளையும் பெருவாரியாக சம்பாதித்துக் கொண்டவர். காரணம், யாருக்கும் அடிபணியாமல் அவர் நடந்து கொண்டதால்.
அப்படிப்பட்ட நரேஷ் குப்தாவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. அவருக்கு பதவி நீட்டிப்பு தர தேர்தல் ஆணையம் விரும்பியது. அவரது திறமையும், பணி அனுபவமும், வருகிற தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என தேர்தல் ஆணையம் கருதியது. ஆனால் பணி நீட்டிப்பை குப்தா விரும்பவில்லை.
தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான அரசியல் அழுத்தங்களை இனியும் தாங்க அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பணி நீட்டிப்பை அவர் வேண்டாம் என்று கூறி விட்டார்.
இதையடுத்து புதிய அதிகாரியை நியமிக்கும் வேலையில் தேர்தல் ஆணையம் மும்முரமாக உள்ளது.
இதையடுத்து தமிழக அரசிடம் 3 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியலை கேட்டிருந்தது தேர்தல் ஆணையம். முதலில் அனுப்பப்பட்ட பட்டியலில் இருந்த மூன்று பேரையும் நிராகரித்த தேர்தல் ஆணையம் தற்போது மேலும் 3 பேர் கொண்ட பட்டியலை பெற்றுள்ளது.
இதுபோக தமிழக அரசின் நிதித்துறை செலவுப் பிரிவு செயலாளராக இருக்கும் பிரவீன் குமார் பெயரையும் தேர்தல் ஆணையத்திற்குப் பரிந்துரைத்துள்ளது.
இவரும் கண்டிப்புக்குப் பெயர் போனவர் என்று கூறப்படுகிறது. மேலும், அரசியல்சார்பற்றவரும் கூட என்றும் தெரிகிறது. எனவே இவர் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
-
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம்












Click it and Unblock the Notifications