For Daily Alerts
Just In
ஓசூர் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் குளோபல் பர்மாடெக் மருந்து உற்பத்தி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் கடந்த 15 வருடங்களாக 200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஆனால், இந்த நிறுவனத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய தொழிலாளர்களிடம், சாப்பிடக்கூட நேரம் கொடுக்காமல் அதிகபட்ச வேலை வாங்குவதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து பல முறை மாவட்ட நிர்வாகத்திற்கு முறையிட்டும் கண்டுகொள்ளப்படவில்லை என கூறப்படுகின்றது.
இதனால் தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிலாளர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்தனர். தகவல் அறிந்த போலீசார் தெழிற்சாலைக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் தொழிலாளர்களிடம் பேச்சுவார்தை நடத்தி வருகின்றனர்.
Comments
Story first published: Wednesday, July 28, 2010, 12:23 [IST]